இப்போது பொம்மைகள் எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருந்தன.
அன்றிரவு முரளிக்கு யாரோ தன் கையைப் பிடித்து இழுப்பதுபோல் இருந்தது. அவன் யார் என்று பார்த்தான்.
எல்லாப் பொம்மைகளும் அவன் முன் நின்றன. அவை முரளியை விளையாட அழைத்தன. அவன் அவற்றுடன் மகிழ்ச்சியாக விளையாடினான்.
அறையில் யாரும் இல்லை. எல்லாம் அடுக்கி வைத்த இடத்தில் இருந்தன. முரளி தான் கண்டது கனவு என்று உணர்ந்தான். அம்மாவிடம் தான் கண்ட கனவைப்பற்றிக் கூறத் துள்ளிக் குதித்து ஓடினான்.